×

சிதம்பரம் கனக சபையில் பக்தர்களுக்கு அனுமதி மறுத்து வைக்கப்பட்ட அறிவிப்பு பலகை அகற்றம்

சிதம்பரம்: சிதம்பரம் கனக சபையில் பக்தர்களுக்கு அனுமதி மறுத்து வைக்கப்பட்ட அறிவிப்பு பலகை அகற்றப்பட்டுள்ளது. கனகசபை மீது ஏறி 4 நாட்களுக்கு பக்தர்கள் தரிசனம் செய்யக் கூடாது என தீட்சிதர்கள் வைத்த அறிவிப்பு பலகையால் சர்ச்சை எழுந்துள்ளது. சர்ச்சையை அடுத்து இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள், போலீஸ் பாதுகாப்புடன் அறிவிப்பு பலகையை அகற்றினர். அறிவிப்பு பலகையை அகற்ற தீட்சிதர்கள் எதிர்ப்பு தெரிவித்து அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

The post சிதம்பரம் கனக சபையில் பக்தர்களுக்கு அனுமதி மறுத்து வைக்கப்பட்ட அறிவிப்பு பலகை அகற்றம் appeared first on Dinakaran.

Tags : Chidambaram Heavy Congregation ,Chidambaram ,Kanakasabha ,
× RELATED பாஜ தலைவர்கள் கண் மருத்துவரை பார்க்க வேண்டும்: ப.சிதம்பரம் விமர்சனம்